Entrepreneurs Dairy

featured image

Pranesh Infant Raj

” அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய் “ Name Bharatha Sirpi Dr. R. Pranesh Infant Raj Father’s Name G.Rajkumar Mother’s Name R. Thangam( Retd Teacher) Date Of Birth 01.11.2000 Native Thanjavur School Name St. Anthony’s Higher Secondary School College Name Annai Velankanni Arts and Science College Current Place Thanjavur அதுவே மனிதனின் சிறந்த அறம் என்ற கொள்கையை தன் உயிர் மூச்சாக சுவாசித்து கொண்டு இருக்கும் சமூக சேவகர், தன்னம்பிக்கை பேச்சாளர் வரும் காலத்தில் தன் அரசியல் தொண்டின்  மூலம் மக்களுக்காகவே பணி செய்து தன் வாழ்நாட்களை அர்பணிக்க காத்திருக்கும் பாரத சிற்பி DR. R.  பிரனேஷ் இன்பன்ட் ராஜ் அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல். உங்களின் சொந்த ஊர் பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR . R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ?    என்னுடைய சொந்த ஊர் தமிழ் நாட்டில் உள்ள பாரம்பரிய வரலாற்று பெருமைகள் பல கொண்டு விளங்கி கொண்டு இருக்கும் தஞ்சாவூர் ஆகும். என் ஊரின் புகழ் என்பது இந்த உலகம் அறிந்த ஒன்றே ஆகும். இங்கே காணப்படும் தமிழரின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் கண்டு ஒரு தமிழனாய் நான் பெருமிதம் கொள்கினறேன்.மேலும் தரணியின் பசி போக்கும் தஞ்சை மண்ணின் விவசாயம் வேறு எந்த மண்ணையும் விட சிறந்தது என்று ஒரு தமிழனாய் நான் எண்ணி மகிழ்கின்றேன். என் சொந்த ஊரின் பெருமைகள் கூறி நான் மகிழ்ந்தாலும் கூட  “யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதே என்னுடைய தாரக மந்திரம். செல்லும் ஊர் எல்லாம் என் ஊரே..! அங்கே வாழும் மக்களுக்கும் என் உறவினர்களே…! அவர்களிடம் வேற்றுமை இல்லாமல் அன்பு செய்வதே என்  பணி ஆகும்.  எந்த இடத்தில் அன்பு சமமாக இருக்கின்றதோ அந்த இடத்தில் எந்த வித ஏற்தாழ்வுகளும் இருக்காது என்பது என்னுடைய கருத்து ஆகும். மனிதனாய் நாம் அனைவரும் சமம்.  மனிதராய் இருந்து பிற மனிதனுக்கு உதவிகள் செய்வது என்பது பெரும் வரம் என்றே நினைக்கிறேன்.அது எல்லாருக்கும் அமைவதில்லை எனக்கு அது அமைந்ததுள்ளது என்பது எனக்கு மன நிறைவான மகிழ்ச்சியை தருகின்றது. உங்களின் குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? என்னுடைய குடும்பம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அப்பா G. ராஜ் குமார். நூலகத்தில் பணியாற்றியவர். அம்மா R.தங்கம். ஆசிரியராக பணியாற்றிவர்,எனது பாட்டி ஆசிரியராக பணியாற்றியவர். எனக்கு அண்ணன் ஒருவர் இருக்கின்றார்.அவரும் அலுவலக வேலையில் இருக்கின்றார். ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மிகவும் மகிழ்ச்சியான குடும்பம் ஆகும். உங்களின் படிப்பு பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? என்னுடைய பள்ளி படிப்பினை St.ANTHONY’s HIGHER SECONDARY SCHOOL ல் படித்தேன். B.SC. DCN.DSE. படத்து உள்ளேன். B.SC (MATHS) இளங்கலை பட்டப்படிப்பினை ANNAI VELLANKANNI ARTS AND SCIENCE COLLEGE ல் படித்தேன். பொதுவாக ஆசிரியர்கள் தான் ஒரு சமூகத்தை வழி நடத்தும் சிறந்த மேய்ப்பான்கள் அல்லது கடவுள்கள் என்று கூட சொல்லலாம். அப்படி பார்க்கையில் என்னை வழி நடத்தி இன்று நான் ஒரு சமூக சேவகராக சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைந்தவர்களில் முக்கியமானவர்களாக கருதுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் எனது ஆசிரியர்களே. ஆசிரியர்கள் பற்றிய உங்களின் கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அவர்களின் பெயர்களை நீங்கள் சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? என்னுடைய பள்ளியின் தாளாளர் Head master திரு. ஃபாதர் J அந்தோனிசாமி அவர்கள். என்னுடைய ஆங்கில ஆசிரியர் திரு. F . ஆல்பர்ட் அவர்கள். என்னுடைய கணித ஆசிரியர் திரு.அமலன் ராஜேஷ் அவர்கள்.என்னுடைய  NSS ஆசிரியர் J. பிரிட்டோ அவர்கள். இன்னும் ஆசிரியர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு கல்வியை கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவரும் என்னுடைய இன்றைய வளர்ச்சிக்கு காரணம் ஆனவர்களே. அவர்கள் அனைவரும் இந்த நேரத்தில் என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் கூற கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் சிறந்த சமூக சேவகர் என்பது நம் நாடு மட்டும் இல்லாமல் இந்த உலகம் அறிந்த ஒன்றே ஆகும்.ஆனால் இந்த சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் எப்போது எங்கு உருவானது அதைப் பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ்..?      உங்களது இந்த கேள்வி மகிழ்ச்சி தருகின்றது மிகவும் நன்றி, முதலில் நான் சமூக செய்தது என்றால் என்னுடைய பள்ளி படிப்பின் போது தான் அது பள்ளி அளவிளானது 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளில் படிக்கும் போது JRC ல் சேர்ந்து பணியாற்றினேன்.8,9, மற்றும் 10 வகுப்புகளில் படிக்கும் போது சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும்  JRC ல் சேர்ந்து பணியாற்றினேன். 11 மற்றும் 12 வகுப்பில் படிக்கும் போது NSS சேர்ந்து பணியாற்றினேன்.அதில் லீடராக இருந்து மற்றவர்களை வழி நடத்தினேன். இது எல்லாம் சமூக சேவை செய்ய எனக்குள் இருந்த தூண்டுதலான நிகழ்வுகளாக இருந்தாலும் கூட. நான் சமூக சேவை செய்ய முக்கிய காரணமாக இருந்தவர் என்னுடைய பாட்டி p. விசுவாசம் அவர்கள் தான்.என்னுடைய கார்டியனும் அவர்களே . மற்றும் என்னுடைய பெற்றோர்கள் நான் செய்யும் ஒவ்வொரு சிறிய சமூக சேவைகளிலும் கூட என்னை ஊக்கப்படுத்தியவர்கள். நீங்கள் எப்போது பள்ளியையும் தாண்டி இந்த சமூகத்தில் உள்ள மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டும் என்று உணர்ந்தீர்கள் பாரத சிற்பி DR. R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? நான் பள்ளியை தாண்டி இந்த சமூகத்தில் வாழும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உணர்ந்தது நான் பள்ளி படிக்கும் போது சென்று இருந்த NSS கேம்ப் ல தான். அப்பொழுது தான் இந்த வெளி உலகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை பற்றி நான் உணரத்தொடங்கினேன்.அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றே என் மனதினை பாதித்து இன்று உங்கள் முன் என்னை சமூக சேவகராக நிறுத்தியுள்ளது. உங்களின் மனதினை பாதித்த அந்த நிகழ்வு என்ன அதைப் பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ்..?     ஒரு மனிதனில் மாற்றம் வேண்டும் என்றால் அவனுக்குள் ஏதேனும் ஒரு மகிழ்ச்சியான அல்லது ஒரு சோகமான அல்லது ஒரு புரட்சியான பாதிப்பு இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். அதே மாதிரி என்னுள் நிகழ்ந்த ஒரு பாதிப்பே என்னுடைய சமூக சேவைக்கு வழி வகுத்தது. நான் பள்ளியில் படிக்கும் போது NSS கேம்ப் சென்று இருந்தேன்.அந்த கேம்ப் முடிவடைவதற்கு மீதம் மூன்று நாட்கள் இருந்து.அப்பொழுது என்னிடம் 15 ரூபாய் பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்பொழுது ஒரு வயதான பாட்டி ஒருவர் வந்தார் என்னுடைய பார்வையில் அவர் பசியில் இருப்பது போல் தோன்றியது.எனவே நான் என்னிடம் இருந்த பணம் 15 ரூபாயை அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்து விட்டார். நீ பார்ப்பதற்கு என் பேரன் போல் இருக்கிறாய் எனக்கு ஏதாவது உன் கைகளால் வாங்கி கொடு என்றார். அவர் கூறிய அந்த வார்த்தை என் மனதில் ஏதோ ஒரு உணர்வினை ஏற்படுத்தியது.நாங்கள் இருந்த பகுதியில் கடைகள் இல்லை.என்ன வாங்கி தருவது என்று நான் யோசித்த போது அந்த வழியாக டீ விற்க்கும் ஒருவர் டூவிலரில் வந்தார் அவரிடம் நான் ஐந்து ரூபாய்க்கு பன்னும் பத்து ரூபாய்க்கு டீயும் வாங்கி கொடுத்தேன். அதை சாப்பிட்ட அவரின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு மகிழ்ச்சி.நீ நல்லா இருப்பா என்று என்னை வாழ்த்தினார். அந்த வாழ்த்தே இன்று என்னை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய இன்று வரை என்னை வழி காட்டி அழைத்து வருகின்றது. அந்த பாட்டிக்கு அன்று நான் செய்த சிறு உதவியே என் முதல் சமூக சேவை. என் மனதினை பாதித்த நிகழ்வும் அதுவே ஆகும். இதை நான் அன்று என்னுடைய பள்ளி தாளாளர் அவர்களிடம் ஆசிரியரிடமும் மற்றும் என்னை சார்ந்த நண்பர்களிடமும் கூறினேன்.இன்று பிறரிடமும் உங்களிடமும் கூறுகின்றேன். கொரோனோ காலகட்டத்தில் நீங்கள் சமூக பணி செய்தீர்கள் அல்வா அதனைப் பற்றிய உங்களின் அனுபவங்களை கூறுங்கள் பிரனேஷ்..? உலகமே ஒரு அறைக்குள் முடங்கியிருந்த காலகட்டம் அது. அந்த சமயத்தில் நான் என்னால் இயன்ற சமூக சேவைகளை இன்டர்நேஷனல் யுனைடெட் கலாம் பவுண்டேசன் உடன் இணைந்து செய்தேன்.ஏனென்றால் நான் அந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவிகள் செய்ய எனக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. நான் மனம் நிறைந்து சமூக சேவை செய்தேன்.கடவுள் என்னுடன் இருக்கிறார் என்று உண்மையுடன் பணியாற்றினேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று அரவணைத்தேன் மருத்துவமே அவர்களை கண்டு அஞ்சி இடைவெளிகளோடு சிகிச்சை அளித்த போது. மேலும் தண்ணீர் பந்தல் அமைத்தேன்.இலவசமாக மருந்துகள் ஒவ்வொரு வீடுகள் தோறும் சென்று வழங்கினேன். எந்த கொரோனாவும் என்னை பாதிப்படைய செய்யவில்லை.மக்களின் அன்பும்,அரவணைப்பும் கடவுளாக இருந்து என்னை பாதுகாத்தது. அந்த யுனைடெட் கலாம் பவுண்டேசன் நிறுவனம் நான் கொரோனா காலத்தில் சிறப்பாக சமூக சேவை ஆற்றியதற்காக BEST SOCIAL WORKER AWARD எனக்கு வழங்கியது.அதனை அதன் பவுண்டர் திரு.DR.செந்தூர்பாண்டியன் அவர்கள் வழங்கினார்.இன்று அந்த நிறுவனத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கின்றேன்.அதாவது இன்டர்நேஷனல் ஜென்ரல் செகரட்ரியாக இருக்கின்றேன். மேலும் எங்களது நிறுவனத்திற்க்கு ஐநா வில் இருந்து அழைப்பு வந்தது.அந்த அமைப்பில் இன்று நான் ஐநா மனித உரிமைகள் அமைப்பு நாடுகளின் peace ambassador மற்றும் ஜென்ரல் செகரட்டியாக உள்ளேன் . நீங்கள் டாக்டர் APJ அப்துல் கலாம் கொள்கைகளை பின்பற்றுபவர் என்று பிறர் சொல்ல கேள்விப்பட்டோம் அதைப் பற்றி எங்களிடம் சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R.பிரனேஷ்

Pranesh Infant Raj Read More »

Jewellery Designer Vaishali Dhanda

Jewellery Designer Vaishali Dhanda

மிஸஸ் இந்தியா மற்றும் மிஸஸ் யுனிவர்ஸ் மற்றும் ஜுவல்லரி டிசைனர் வைஷாலி தண்டா அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல். (Jewellery Designer Vaishali Dhanda ) Nick Name vaishu Name Vaishali Dhanda Insta id halidhandaoffical Current City Chennai Date of Birth 02/04/79 Profession jewellery designer and model Awards iron lady 22 , mrs India 23 , mrs.universe 23 *உங்களின் ஜுவல்லரி டிசைனர் work பற்றி சொல்லுங்கள் வைஷாலி ? பெரும்பாலான பெண்களின் திருமண வாழ்க்கைக்கு பின் அவர்களின் கனவுகளும், லட்சியங்கள், மற்றும் விருப்பங்கள் மனதிற்க்குள் புதைக்கப்பட்டு விடுகின்றன, அதற்கு அடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை பற்றி அவர்கள் சிந்திப்பதும் இல்லை அவர்களை அவர்களை சுற்றியுள்ளவர்களே சிந்திக்க விடுவதும் இல்லை, ஆனால் என்னுடைய வாழ்க்கை அப்படி இல்லை, எனது திருமணத்திற்கு பின்பே என் வாழ்க்கையில் நான் சாதிக்க தொடங்கினேன், அதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த ஜுவல்லரி டிசைனர் work. எனது மகள் பிறந்த பின்பு தான். ஜுவல்லரி டிசைன் பற்றி எனக்கு ஆர்வம் இருப்பதை எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.அது தெரிந்தவுடன் அவர்கள் என்னை உற்சாகப் படுத்தி என்னால் சாதிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தனர்.அதன் பிறகு தான் நான் அதைப்பற்றி படிக்க தொடங்கி இன்று அந்த துறையில் சாதித்தும், சாதிக்கவும் தொடங்கியுள்ளேன்- Jewellery Designer Vaishali Dhanda திருமணத்திற்கு பிறகு உங்களுக்கு ஜுவல்லர்ஸ் டிசைன் பற்றி எவ்வாறு ஆர்வம் அதிகரித்தது வைஷாலி ? -Jewellery Designer Vaishali Dhanda அதற்கு காரணம் என்னுடைய மகள் என்றே கூறுவேன்.அவளுடைய கைரோகள் மற்றும் சிறு சிறு தடயங்களை நான் மறக்காத நினைவு பொக்கிஷங்கள் ஆக வைத்துக்கொள்ள நினைத்தேன்.அதை ஜுவல்லர்ஸ் ஷாப்களில் டிசைன் செய்து தரும் படி கேட்க்கும் போது அது அவர்களால் சரிவர முடியவில்லை, அதனால் எனக்குள் அதை நாமே செய்தால் என்ன என்று தோன்றியது.அதுவே நான் இன்று ஜுவல்லர்ஸ் டிசைனராக இருப்பதற்கு முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு அடுத்து நான் அதைப்பற்றி அமெரிக்காவில் உள்ள GIA படித்தேன்.முதலில் சில்வரில் டிசைன் செய்தேன், அதற்கு அடுத்து கோல்டில் செய்ய தொடங்கினேன் இன்று பல்வேறு வகையான டிசைசன்கள் செய்து வருகிறேன். என்னைப்போல் பலர் சிறு குழந்தைகளின் ஞாபகங்களை ஜுவல்லர்ஸ்ஸாக செய்ய விரும்புகின்றனர். ஆனால் அது அவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அதை என்னுடைய டிசைனிங் ஒர்க் மூலம் மிக எளிதில் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் படி செய்து வருகிறேன். எனது மகள் பெயரில் ஜுவல்லரி டிசைன் நிரோஷா ஷாப் ஒன்றை நடத்தி வருகிறேன்- Jewellery Designer Vaishali Dhanda ஜுவல்லரி டிசைனரில் இருந்து மிஸஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸஸ் இந்தியாவாக நீங்கள் மாற்றம் அடைந்து எப்படி வைஷாலி ? அது கொரோனா கால கட்டத்தில் நான் இருந்தபோது உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன். அதாவது யோகா போன்ற உடற்பயிற்ச்சிகள், அதற்கு அடுத்து மிஸஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்ச்சிகளை மேற்க்கொண்டேன். அதற்கு அடுத்தாற்போல் அந்த போட்டிகளில் கலந்து கொணடேன்.அதில் MRS.INDIA 23. MRS UNIVERSE 23 AWARDS வாங்கி வெற்றி பெற்றேன். உங்களுடைய சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் வைஷாலி? சொந்த ஊர் டில்லி தற்போது வசிப்பது சென்னையில். உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள்? நம்மை பற்றி விமர்சிப்பவர்கள் யாரும் நம்முடைய முயற்ச்சிகளின் இன்ப துன்ப பயணங்களில் உடன் வர போவதில்லை என்று எண்ணுகிறேன். உங்களை போல் சாதிக்க போராடுபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது…? – Jewellery Designer Vaishali Dhanda ஒரே இரவில் நாம் வெற்றி பெற முடியாது, அதற்காக தொடர்ந்து போராட வேண்டும். நம் கடின முயற்சி அதற்கு அடுத்து வெற்றி பெறுவதற்கான போராட்டங்களுக்கு பின்பே நாம் வெற்றி பெற முடியும். நம்மை பற்றி விமர்சிப்பவர்களை பற்றி நாம் திரும்பி பார்த்தோம் என்றால் கண்டிப்பாக தோல்வி அடைவோம்.அவர்களின் விமர்சனங்களை கடந்து நாம் சாதனைகள் படைக்க வேண்டும்- Jewellery Designer Vaishali Dhanda திருமணமான பெண்கள் சாதிப்பதில் உள்ள தடைகள் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? – Jewellery Designer Vaishali Dhanda திருமணம் என்பது உங்களது கனவுகளை புதைத்து விடாது. நீங்கள் உங்களது லட்சிய கனவுகளில் வெற்றி பெற போராடுங்கள் அதில் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி அடைந்து சாதனை பெண்களாக நீங்கள் இந்த உலகில் வலம் வருவீர்கள். அப்பொழுது இந்த உலகமே உங்களை வியந்து திரும்பி பார்க்கும். நீங்களும் சாதிக்க போராடும் பெண்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கலாம். அறிவு, திறமை, அழகு கொண்டு தன் கடின உழைப்பினால் முன்னேறி இன்று ஜுவல்லர்ஸ் டிசைனர், மிஸஸ் யுனிவர்ஸ், மிஸஸ் இந்தியாவாக வலம் வந்து சாதனை படைத்து வரும் வைஷாலி தண்டா அவர்களின் கனவுகளும், லட்சியங்களும் நிறைவேறி இன்னும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துவோம்.

Jewellery Designer Vaishali Dhanda Read More »

jaya

ஜெயா

முயற்சி செய்தால் நம்மால் முடியாது என்று எதுவும் இல்லை என்பதை தன் வாழ்நாளில் வெற்றிகரமாக நிறைவேற்றி கொண்டு வரும் இன்ஸ்ட்டாகிராமில்ஆங்கில பயிற்சி வகுப்பு மற்றும் எண்டெர்டெயின்மென்ட் வீடியோக்கள் பதிவிட்டு வரும் சாதனை பெண் ஜெயா அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல். Name Jaya Father\’s name Jegadeesan Mothers name Maheshwari Dob 23/08/2001 Native Trichy School Integrated Indian school Kuwait College Krishna college of technology, Coimbatore Degree BTECH IT Current place CHENNAI, OMR Highlights Communication skill trainer உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி கூறுங்கள் ஜெயா..? என்னுடைய சொந்த ஊர் திருச்சி அங்கே தான் நான் ஆறாம் வகுப்பு வரை படித்தேன், பின்னர் என்னுடைய படிப்பிற்க்காக வேறு பள்ளியில் சேர்த்தார் அப்பா, அப்பாவின் உழைப்பின் கஷ்ட்டங்கள் எல்லாவற்றையும் நாங்கள் உணர வேண்டும் என்று அப்பா எண்ணிணார், அவ்வாறு நான் பார்த்து வளர்ந்ததால் எந்தவொரு கஷ்ட்டமான சூழ்நிலைகளையும் கடந்து செல்லும் முன்பக்குவம் எனக்கு இன்று வந்துள்ளது என்று நினைக்கின்றேன், அதன் பின்னர் என்னுடைய கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் படித்தேன்.இன்று IT ல் பணிபுரிந்து வருகின்றேன். உங்களின் வேலை பணிகளுக்கு இடையில் எவ்வாறு உங்களது ஆங்கில இன்டர்வியூ பயிற்சி வகுப்புகள்..? முதலில் சொல்ல வேண்டும் என்றால் முதலில் நான் ஆங்கிலம் பேச கஷ்ட்டப்பட்டேன், அடுத்தவர்கள் எல்லாம் நான் ஆங்கிலம் பேசும் போது விமர்சனம் செய்வார்கள், அப்பொழுது நான் நினைப்பேன் பேசுவது என்பது எந்த மொழியாக இருந்தால் என்ன என்று, ஆனால் வேற மொழிகள் தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமானது என்று வேலைக்கு இன்டர்வியூ, போகும் போது தான் தெரிந்தது, அதனால் ஏன் நாமே இன்டர்வியூ சம்மந்தப்பட்ட ஆங்கில பயிற்சி வீடியோக்கள் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது பதிவிட ஆரம்பித்தேன், முதலில் Black hole என்று பதிவுகள் போட ஆரம்பித்தேன், நான் எப்படி முதலில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், என்று பதிவிட்டேன் ஆரம்பத்தில் அது அவ்வளவாக பார்வையாளர்களை போய் சேரவில்லை, அதுக்கு அடுத்து இன்ஸ்ட்டாகிராமில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் பற்றி பதிவிட ஆரம்பித்தேன், அதற்கு ஓரளவு வரவேற்பு இருந்தது தொடர்ந்து பதிவிட்டேன், அதிக பார்வையாளர்கள் அதனால் பயன் அடைந்துள்ளனர், ஆரம்பத்தில் இலவசமாக நிறைய பார்வையாளர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் வீடியோ பதிவிட்டேன், பின்னர் என்னுடைய ஆங்கில பயிற்சி வகுப்புக்கள் தொடர்பான வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகமானார்கள், அதனால் நிறையா பேர் பயனடைய ஆரம்பித்தார்கள், இது மேலும் என்னுடைய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது, இதனால் இதை எனது வேலை பணிகளுக்கு இடையே தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன், இந்த பதிவுகள் ஆரம்பத்தில் The expound என்ற பெயரில் தான் போட ஆரம்பித்தேன்.இதில் ஆன்லைன் இன்டர்வியூ தொடர்புடையது என்பதால் இதில் நிறையா பேர் பயன் அடைந்துனர். ஆங்கில பயிற்சி வகுப்புகள் தவிர நீங்கள் வேறு என்ன என்ன பதிவுகள் உங்களுடைய இன்ஸ்டா பதிவு பக்கத்தில் பதிவிட்டு வருகின்றீர்கள் ஜெயா..? ஆங்கில பயிற்சி வகுப்புகளை தவிர மூவி ரீவிவ்ஸ் அது போன்ற எண்டர்டெயின்மெண்ட் பதிவுகளையும் பதிவிட்டு வருகிறேன். இதுவும் எனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது. தொடர்ந்து 5 மாதங்களாக பதிவிட்டும் வருகின்றேன். உங்களது ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடர்பான வீடியோக்களால் எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர் ஜெயா..? எனக்கு தெரிந்து 4000 பேருக்கு மேல் பயன் அடைந்துள்ளனர்.இன்னும் எண்ணற்றோர் பயன் அடைந்தும் வருகின்றனர். உங்களுடைய கனவு லட்சியம் என்றால் எதை கூறுவீர்கள் ஜெயா..? ஒரு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் உள்ள மேடையில் எனது ஆங்கில பயிற்சி வகுப்புகள் மற்றும் ஒரு துறையில் ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் போன்ற எனது கருத்துக்களை பேச வேண்டும் அது அவர்களை சென்றடைய வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். உங்களை போல் முயற்சி செய்து ஒவ்வொரு துறையிலும் சாதிக்க துடிக்கும் நபர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ஜெயா..? உங்களுக்கான லட்சிய முயற்சிகளை நீங்கள் செய்யுங்கள்வெற்றி உங்களை தேடி வரும். உங்களால் முடியாது என்று எதுவும் இல்லை. நம்ம வாழ்க்கையில நம்மால முடிந்த வரைக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வளவு தான் நான் கூறுவது. உங்களின் இந்த முயற்சிகளுக்கும் வெற்றிகளும் உறுதுணையாக இருப்பவர்கள் யார் என்று நினைக்கின்றீர்கள் ஜெயா…? பொதுவாக நான் என்னுடைய முயற்சிகள் மட்டுமே எனது வெற்றிகளை வழி நடத்தி செல்லும் என்று நம்பிக்கை கொள்வேன். இதையும் தாண்டி எனது இந்த சாதனைகளுக்கு காரணம் என்னுடைய அப்பா கொடுத்த தன்னம்பிக்கை, மற்றும் என்னுடைய பதிவுகளை பார்வையிடும் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களும் என்னுடைய வெற்றிக்கு காரணமானவார்கள் ஆவார்கள். தன் தன்னம்பிக்கை கொண்டு சாதனை புரிந்து வரும் சாதனை பெண் ஜெயாவின் லட்சிய கனவுகள் நிறைவேறி அவரின் ஆங்கில இன்டர்வியூ பயிற்சி வகுப்புகளால் இன்னும் எண்ணற்றோர் பயன் பெற வாழ்த்துவோம்.

ஜெயா Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.28 PM 2

Shri Janani

நமக்கு சோறு தான் முக்கியம்| ஸ்ரீ ஜனனி| வாழ்வியல்| உணவுகளை ஆராய்ந்து சுவைப்பதில் ஆர்வம் கொண்டவர் ஸ்ரீ ஜனனி. இவர் சிங்கார சென்னையில் 9.4.1999ல் பிறந்தவர்தன் கல்லுாரி கல்வியில் இரண்டு பட்ட படிப்புக்களையும் உணவு துறையில் பயின்றவர்.சிறு வயதில் இருந்தே உணவின் மீது தீராத காதலும் ஆர்வமும் கொண்டவர்இவரின் கனவே எதிர்காலத்தில் ரெஸ்ட்டாரன்ட் ஆரம்பிக்க வேண்டும் என்பதேநாகரீக போக்கின் வளர்ச்சியில் உணவிற்க்காக நேரம் ஒதுக்கி நாம் ருசித்து ரசித்து சாப்பிடுவது என்பது மிகவும் குறைவும் அரிதும் ஆகும்.அவ்வாறு இருக்கையில் உணவின் முக்கியத்துவமும் அது எங்கே தரம் வாய்ந்ததாக கிடைக்கும் எனவும் ஆராய்ந்து மக்களின் பார்வைக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் பிளாக்கின் மூலம் கொண்டு சேர்க்கும் இவரின் அரிய பணியை நாமும் பார்ட்டி தான் ஆக வேண்டும் சோறு தான் முக்கியம்| தலைப்பிட்ட| ஸ்ரீ ஜனனி சோறு என்பது தமிழரின் உணவு முறைகளில் இன்றியமையாத ஒன்றாகும்… நீரின்றி எவ்வாறு உலகு அமையாதோ அதைப் போன்று சோறு இன்றியும் தமிழரின் வாழ்வு அமையாது என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் உணவில் நீங்காத இடம் பெற்று இருப்பது சோறு தான்…! ஏர் ஓட்டும் உழவு தேசத்தில் சோறுக்கு என்றும் குறைவு என்பதே இல்லை தான்.. இந்த தலைப்போடும் இது ஒன்றிதான் போகிறது ஸ்ரீ ஜனனியின்| food review | பயணம்| எவ்வாறு தொடங்கியது முதலில் இவரின் பயணம் உணவு முறைகள் பற்றிய நோக்கங்கள் இல்லாமலும் எந்த வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் தொடங்கியது என்றே கூறலாம்… குடும்பத்தினரோடு பிறந்தநாள் நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் உணவு விடுதிகளுக்கு ( ஹோட்டல்) செல்வது இவரின் வழக்கம் அவ்வாறு செல்கையில் அங்கே இவர் ரசித்து உண்ணும் உணவுகளை புகைப்படம் எடுப்பது இவருக்கு பிடித்தமான ஒன்றே…! இது இவர் இந்த உணவினை வீட்டில் செய்து பார்ப்பதற்கு உதவியாகஇருந்தது…! இந்த போட்டோக்களை என்ன செய்வது செல்போனில் இருந்தால் அழிந்து விடும் வாய்ப்புகள் அதிகம் எனவே தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பிளாக்கையும் உருவாக்கி முதலில் இந்த போட்டோக்களை பதிவு செய்தார்.நண்பர்கள் வட்டத்திலும். பார்வையாளர்கள் வட்டத்திலும்அது முதலில் ஓரளவுக்கு பார்வையார்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது இவ்வாறே முதலில் தொடங்கியது ஸ்ரீ ஜனனியின் உணவு ஆராயும் ( food review) பயணம் கொரோனா காலமும்|ஸ்ரீ ஜனனி யின் food review( உணவு ஆராய்வும்) இவ்வாறு தனது புகைபாபடங்களை பதிவிட்டு வந்த போது தான் கொரோனா லாக்டவுன் வந்தது..இதில் இவர் வீட்டில் இருந்தவாரே பல வகையான உணவுகளை தானே சமைத்தார்.சமைத்ததோடு மட்டும் அல்லாது அதை பிளாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரவும் தொடங்கினார்.. இருப்பினும் உணவு போட்டாக்களை மட்டும் பதிவிடுவது இவருக்கு மனநிறைவு அளித்திடவில்லை..அதை வீடியோ எடுத்து பதிவிட்டார்.பின்னர் அந்த உணவு போட்டோ வீடியோக்களுக்கு வாய்ஸ் ஓவர் செய்தார்..போட்டோக்கள் பதிவிட்டதை காட்டிலும் மக்களின் கவனத்தை ஈர்த்தது நல்ல வரவேற்ப்பை பெற்றது இவர் செய்த உணவு பற்றிய வாய்ஸ் ஓவர் வீடியோக்கள் இவ்வாறு கொரோனோ காலகட்டத்தில் இவரின் உணவு ஆராயும் ஆர்வம் மேலும் அதிகமானது. ஸ்ரீ ஜனனி| எவ்வாறு ஒரு உணவு விடுதியில்| உணவுகளை ஆராய்ந்தார்| முதலில் ஹோட்டலுக்கு செல்லும் ஸ்ரீ ஜனனி அங்குள்ள உணவு வகைகளை ரசித்து ருசித்து சாப்பிடுவார்.பின்னர் ஓரிரு நாட்களோ வாரங்களோ கழித்து அங்கே சென்று தான் ஏற்க்கனவே இந்த ஹோட்டலுக்கு வந்த சாப்பிட்டு சென்றேன்..இங்கே இந்த வகையான உணவு நல்ல சுவையுடன் இருப்பதால் மீண்டும் வந்தேன் என்று கூறி அவர்களிடம் அனுமதி வாங்கியே அங்குள்ள உணவுகளை வீடியோ எடுப்பார்..அதை தான் இன்ஸ்டாகிராம் மற்றும் பிளாக்கின் பக்கங்களில் பதிவிடுவார்..இதை பார்க்கும் நண்பர்களும் பார்வையாளர்களும் இந்த ஹோட்டலுக்கு சென்று அங்கே வயிறாற சாப்பிட்டு மனநிறைவும் மகிழ்வும் அடைவது உண்டு ஆரம்பத்தில் |தான் செய்யும் food review|ல் விமர்சிக்கப்பட்ட ஸ்ரீ ஜனனி| முதலில் வெளிவட்டத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் குடும்பநபர்கள் ஆகியோரின் பார்வையில் இவரின் இந்த வேலை தேவையற்ற ஒன்றாகவே தெரிந்தது..இதை ஏன்? நீ செய்யிற ஒன்றுக்கும் உதவாது என்று எல்லாம் சொல்லி இவரை விமர்சிப்பார்கள்இருந்தாலும் அந்த விமர்ஙனங்களின் வலைவிரிப்பில் இவர் மாட்டி கொள்ளவில்லைமுதலில் தனித்து போராட தொடங்கினார்தனக்கென்று ஒரு புகழ்வாய்ந்த வெற்றி இடத்தினை food review செய்வதில் பிடித்தார் முதலில் இவரை வீண் வேலை என்று பேசியவர்கள் இவரின் வளர்ச்சியை கண்டு பாராட்டினர். இவரின் அப்பா , அண்ணன் போன்றோர் இவருக்கு துணையாக நிற்க்க தொடங்கினர் மேலும் தரம் வாய்ந்த உணவுகள் எங்கு கிடைக்கும் என்பதையும் இவரின் வேலைக்கு உதவியாக கூற தொடங்கினர். விமர்சனங்கள் வெற்றியை நோக்கி நம்மை அழைத்து செல்லும் வழி என்பதுஸ்ரீ ஜனனி யின் வாழ்வில் உண்மையே. ஸ்ரீ ஜனனி இன்ஸ்டாகிராம்| பிளாக்| தொடக்கத்தில் பிளாக்கினை பற்றி எதுவும் அறியாமல் தான் உள்ளே வந்தார் ஸ்ரீ ஜனனி. இருந்தாலும் இதில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் ஓவர்கள் மிகுந்த பாரட்டை பெற்றது.பிளாக்கில் இருந்த சக நண்பர்கள் தன்னை ஊக்குவித்து பாராட்ட தனது உணவு பற்றிய பதிவுகளை ஆர்வத்தோடு மேலும் பதிவிட்டார் ஸ்ரீ ஜனனி. இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவருக்கு என அதிக பார்வையாளர்களும் பாலோவர்களும் உண்டு சோறு தான் நமக்கு முக்கியம் என்றால் முதலில் ஞாபகத்தில் வருவது ஸ்ரீ ஜனனி தான் என்று சொல்லும் அளவிற்குமிகவும் பிரபலமானவராக இவர் இருக்கிறார் என்றால் நாம் ஏற்று கொள்ள கூடியதே ஆகும். ஸ்ரீ ஜனனி யின்| கனவு ரெஸ்ட்ராண்ட்| ஸ்ரீ ஜனனி யின் லட்சிய கனவே ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஆகும்.. இப்பொழுது எல்லாம்( home delivery food ) வீட்டில் இருந்தவாறே உணவு வகைகளை ஆடர் செய்து சாப்பிடும் பழக்கத்திற்க்கு நாம் பெரும்பாலும் அடிமையாகி காணப்படுகின்றோம்.இது ஆரோக்கியமான பழக்கம் இல்லை என்றே கூறலாம்.அவ்வாறு நாம் சாப்பிடும் உணவின் தரம் குறைந்ததாகவே பெரும்பாலும் இருக்கும். இந்நிலை மாற வேண்டும் என்பது ஸ்ரீ ஜனனியின் ஆசை ஆகும். தான் ஆரம்பிக்கும் ரெஸ்ட்டாரன்டிற்க்கு வரும் மக்கள் உணவினை அதே சுவையோடு ரசித்து உண்ண வேண்டும் .இதனால் மக்கள் உணவுக்கு என்று நேரத்தினை ஒதுக்கி சுவைத்து சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கும் என்பது இவரின் நோக்கம் ஆகும்.இவரின் கனவு ரெஸ்ட்டாரன்ட் கனவு வெகு விரைவில் நிறைவேறிட நாமும் வாழ்த்துவோம். ஸ்ரீ ஜனனி| கூறும் உணவு பற்றிய விழிப்புணர்வுகள்| உணவை வீணாக்குவது என்பது நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும் தீமை ஆகும்.உணவின்றி பசியோடு இருக்கும் எத்தனை பேர்களை நாம் தினசரி வாழ்வில் பார்க்கின்றோம்.அவ்வாறு இருப்பவர்களுக்கு நாம் உணவினை கொடுத்து உதவலாம் மேலும் தான் food review செய்யும் இடங்களில் உள்ள உணவுகளை வீணாக்காது அருகில் உள்ள பசியால் இருப்பவர்களுக்கு கொடுப்பது உண்டு. இவ்வாறு செய்யும் ஒரு செயல் கூட இந்த சமுதாயத்திற்கு நாம் செய்யும் நன்மை தான்என்கிறார் ஸ்ரீ ஜனனி. ஸ்ரீ ஜனனி| தொடரும் உணவு ஆராயும் பயணம்| இவரின் இந்த சிறப்பான பணி தொடர்ந்து சிறந்திடஇவரின் ரெஸ்ட்டாரண்ட உருவாக்கும் கனவு நிறைவேறிட நாமும் வாழ்த்தி மகிழ்வோம்

Shri Janani Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.23 PM 1 1

Ronnie Nityanand

பியூட்டி குயின் Ronnie Nityanand ( beauty queen)அழகாய் இவளின்இதழ் அசைவுகள் பூசிகொள்ளும் புன்னகைசாயங்கள்பிறரை அழகாக்கி மகிழ்வதே இவள் வாழ்வின் நோக்கங்கள்நடன மங்கையாய்நாட்டியம் ஆடிஅசைந்து வரும்வண்ண மயிலெனஅமைதியை (மெடிடேசன்)கல்வியாய்போதிக்கும் அறிவுசிலையெனமீடியா மற்றும் காஸ்மெட்டிக் மார்க்கெட்டிங் என்றுதுளி நேர ஓய்வும் இல்லாத காஸ்மெட்டிக் தயாரிப்பாளர் Ronnie Nityanand உடன் அழகான நேர்காணல் உங்களின் படிப்பு காஸ்ட்ராயாலஜி (அழகு பொருட்கள் தயாரிப்பு)அழகில்லாத உயிர்கள் என்று எதுவும் இல்லைஉயிரற்ற பொருட்களின்உருவங்கள் கூட மிகவும்அழகானதே.என்று எண்ணுபவள் நான்.எனது படிப்பும் அழகு பொருட்கள் தயாரிப்பை சார்ந்தது தான். காஸ்ட்ராயாலஜி படிச்ச நீங்க எப்படி மெடிடேசன் டீச்சர் ஆனீர்கள் மெடிடேசன் செய்வதின் மூலம் மனம் அமைதியாகும்இங்கே வாழ்பவர்கள் அனைவருக்கும் அமைதி என்பது தேவையான ஒன்று தான். அதில் நானும் ஒருவர் என்று எண்ணுகிறேன்.அதனால் மெடிடேசன் பள்ளி ஒன்றில் பணி புரிகின்றேன். பியூட்டி குயின் Ronnie Nityanand டான்ஸர் Ronnie Nityanand ஆனது எப்படி எனக்கு நடனத்தில் ஆர்வம். அதனால் நடனத்தை மிகவும் நேசித்து பழகினேன்இப்பொழுது நான் ஒரு உகந்தா டான்ஸர் உங்களின் மீடியா அனுபவம் பற்றி மனம் திறங்கள் கேட்க்கலாம் மீடியா வாய்ப்பு என்பது எனக்கு நண்பர்கள் மூலமாகவே கிடைத்ததுநடிப்பு என்பது ஒரு சாதாரண செயல் இல்லைஅதற்கு நிறையாக கடின உழைப்பு தேவைஎன்னை பொறுத்தவரை நான் நடித்து இந்த ஆண்டில்வெளிவர உள்ளஇரண்டு ஸ்டார் ஃபிலிம், இரண்டு வெப் சீரியஸ்,1 சீரியல்.. என்று அனைத்தும் நடிப்பில் எனக்கு ஒரு நல்ல நடிகை என்று ஒரு பெயரினை பெற்று தரும் என்று எண்ணுகிறேன்.இதை தவிர இரண்டு ஆல்பம் பண்ணியிருக்கேன்.அதோட பெயர் YEAH YEAH pulla. Album உங்களது ஸ்டார்டஸிக்கல் கம்பெனி பற்றி என்னோட ஸ்டார்டஸிக்கல் கம்பெனி விரிவு படுத்த வேண்டும் என்பது எனது ஆசை.சேல்ஸ் மார்க்கெட்டிங்கில் நல்லஒரு முன்னேற்றமான இடத்தை பிடிக்க வேண்டும்இங்கு ஏற்க்கனவே ஐந்து பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்என் கம்பெனியின் பிராண்ட் நேம் IVO CATபுரொடெக்ட் நேம் CHEZ GLO. குழந்தைகளின் அழகு தேவதை Ronnie Nityanand முதலில் எனது சொந்த ஆர்கானிக் குழந்தைகளுக்கானஅழகு சாதன பொருட்களை தயாரித்து உள்ளேன்அது மார்க்கெட்டிங் வட்டத்தில் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனைக்கு வர உள்ளது.அதற்க்கு அடுத்து ஆண்.பெண். இருவருக்குமான அழகு பொருட்களை அறிமுக படுத்த உள்ளேன்.இவைகள் நம் ஸ்கின்னிற்க்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவையாகும் கல்லூரி மாணவிகளுக்கும் பெண்களுக்கும் வழிகாட்டும் Ronnie Nityanand பொதுவாக பெண்கள் அனைவரும் முன்னேற்றம் பெற வேண்டும் என்று எண்ணுகிறேன்.இரவில் தனது காஸ்மெட்டிக் தயாரிப்பு பணியிலும் பகலில் கல்லூரி வகுப்பில் மாணவிகளுக்கு இதனை பற்றி சொல்லிகல்லூரியை விட்டு வெளிவரும் போதேஅவர்களுக்கான பணியை அவர்களுக்கு உரிய சம்பளத்தோடுபெற்றிட வழி காட்டுகின்றேன்

Ronnie Nityanand Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.24 PM

saranya

மேடைகளில் நடை பழகிதவழ்ந்து வரும் நிலவேஉன் ஆடை அலங்காரபாவனைகள் கண்டுகீழே கை தட்டிமகிழ ரசிகர்கள் கூட்டம்ஏராளம்.மீடியா துறையில்இவள் நடித்தசீரியல்கள் நம்கண்ணுக்குள் நிற்க்கின்றது.குறும்படங்கள், மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்றுமீடியா துறை மட்டும்இல்லாமல் பல துறைகளிலம் சாதனைபுரிந்து வரும் நடிகைமற்றும் ஈவன்ட் ஆர்க்கனைஸர் சரண்யாவுடன் ஒரு சந்திப்பு சரண்யாவின் சாதனைகளுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என் சாதனைகளுக்கு பின்னால் இருப்பது என்னுடைய துணிச்சலும் தன்னம்பிக்கை மட்டுமேஅதுவே எனக்கான வெற்றியை நான் அடைந்தற்க்கும். இனிமேல் அடைவதற்க்கும் என்னை அழைத்து செல்லும்.நம் ஒவ்வொருவர் இடத்திலும் இது கண்டிப்பாக உண்டு. உங்களின் சீரியல் வாய்ப்பு முதலில் உறவினர் மற்றும் நண்பர்கள் என ஒரு இயக்குனர் மூலம் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது.விஜய் டிவியில் அரண்மனை கிளி சீரியலில் அது ஒரு லாயர் கேரக்டர்அந்த கதைக்கு அது அழுத்தமான கேரக்டர் தான்.அது மக்களிடம் என்னை ஒரு நடிகையாக கொண்டு சேர்த்தது உங்களின் ஆர்வம் ராம் ஷோ . மற்றும் பேஷன் ஷோவின் மீது எவ்வாறு திரும்பியது அரண்மனை கிளி சீரியலுக்கு பின்பே ராம்ஷோ மற்றும் பேஷன் ஷோவின் மீது எனக்கு ஆர்வம் வந்ததுஏன்? நம்மால் முடியாதுஎன்று.முதலில் கைரா ஈவன்ட் சிட்டி சென்டரில் நடத்திய மிஸஸ். சவுத் இண்டியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுமிஸஸ் சவுத் இண்டியா டைட்டில் பெற்றேன் அதற்கு அடுத்து பேஸ் ஆப் கோயம்புத்தூர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டுபேஸ் ஆப் கோயம்புத்தூர் டைட்டில் பெற்றேன். அதற்கு அடுத்து மிஸஸ் ஒக்கேரா இண்டியா ஆன்லைனில் நடத்தியநிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் டென்வின்னிங் தர வரிசையில் வந்தேன். துணிச்சல் சரண்யா ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை உருவாக்கியது எப்போது நம்ம நிறையா ஈவன்ட் ல கலந்துக்கிறோம்.ஏன் நம்மளே சொந்தம்மா ஒரு ஈவன்ட ஆர்க்னைஸரா ஆக கூடாதுன்னு எனக்குள்ள ஒரு எண்ணம் உருவாகியது. அந்த எண்ணத்தோட ஆரம்பம் தான்.என்னோட லா பேஸன் ஈவன்ட் கம்பெனி( laa fashion event company)என்னோட மகன் பெயரோட எழுத்தை வச்சு ஆரம்பிச்சேன்.ஆனா அதோட குயின் நான் தான் அதோட முதல் ஷோ வந்து நான் எங்கு என்னோட பேஷன் லைப்ப ஆரம்பிச்சனோஅதே சிட்டி சென்டர்லதான் நடத்தினேன் 50 மாடல் வச்சு அந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்தேன். அதுக்கு அடுத்து பிரைட் ஆப் மாம் ஷோ பண்ணுணேன் அந்த ஷோவில் 50 குழந்தைகள் அவங்க அம்மாவுடன் கலந்து கொண்டு அழகாக நடந்து வந்தாங்க அதுக்கு அடுத்து நான் பண்ணுண்ண ட்ராவல் ஷோன்னா தமிழகத்தின் ஐ கான் ஷோ தான்.தமிழ் நாட்டுல இருக்கிற எட்டு பகுதிகளை தேர்வுசெஞ்சு ஆடிசன் நடத்தினோம் அதுல 300 பேர்கள் பங்கேற்றனர்.இறுதியாக சென்னையில் நடைபெற்ற அந்த ஷோவில் 70 பேர் பங்கேற்றனர் அதுக்கு அடுத்து மிஸ்டர் மிஸ் மிஸஸ் பேஸ் ஆப் தமிழ் நாடு ஸ்டேஜ் ஷோவேல்ஸ் யுனிவர்சிட்டி பல்லாபுரத்தில் நடத்தினேன்.அதுவும் எனக்கு ஒரு நல்ல பெயரை மக்கள் மத்தியில் வாங்கி தந்தது. அதுக்கு அடுத்து அப் கம்மிங் அக்டோபர் மாதம் பிரைட் ஆப் இயர்அவார்ட் ஈவன்ட் நடத்த போறேன். என்னோட கனவு என்னான்னா இதை ஒரு விஐய் டிவி அவார்ட் மாதிரி கொண்டு வரணும் இதன் மூலமா நிறையா திறமையானவங்களுக்கு விருது வழங்கணும்என்பதே ஆகும். உங்களோட ஷார்ட் பிலிம் பற்றி சொல்லுங்க பிகைண்ட் உட்ஸ் சேனல்ல தான் என்னோட ப்ரஸ்ட் ஷார்ட் பிலிமான எதற்க்கும் அஞ்சேல் ரிலீஸ் ஆனது.அந்த ஷார்ட் பிலிம்ல நான் அஸோஸியேட் ட்ரைக்டரா ஒர்க் பண்ணியிருந்தேன்.அதுல நான் நடிச்சும் இருந்தேன் அதுக்கு அடுத்த என்னோட ஷார்ட் பிலிம்மான ஜஸ்ட் மிஸ் படமும் பிகைண்ட் உட்ஸ்ல தான் ரிலிஸ் ஆக போகுது துணிச்சல் சரண்யாவான நீங்க துணிந்து போராடி வாங்கிய அவார்ட்ஸ் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லுங்கள் அவார்ட்ஸ் சொல்லும் போதுரிவர்ஸ் மாரத்தான் ஈவன்ட் ல ஒரு ஈவன்ட பாட்னர் பங்கேற்றேன்அதன் மூலமாகஎனக்கு இண்டியா புக் ஆப் அவார்ட் கிடைத்தது அதுக்கு அடுத்து நிறையா விருதுகள் பெற்றேன் என்னுடைய ஈவன்ட் ஷோக்களுக்காக உங்களோட லட்சிய கனவுன்னா நீங்க எதை சொல்லுவீங்க நான் ஒரு சிறந்த பெண் எண்டர்பிரணராக இருக்கணும்.என்னை மாதிரி மீடியா துறை மட்டும் இல்லாமல் வேறு எந்த துறையாக இருந்தாலும் அதில் முன்னேற முயற்சி செய்பவர்களுக்கு ஒரு ஏணி படியா இருக்கணும் அதுக்கு அடுத்து நான் சொல்லுறதுமீடியா துறையில் சாதிக்க திறமை இருக்கிற பெண்கள் நிறையா பேர் வரணும்.மீடியா ஒரு நல்ல வாய்ப்பு வாழ்க்கையில் பெயர் புகழோடு விளங்கிட. திருமணமான பெண்கள் தன் வாழ்க்கை அதோடு நிறைவு பெற்று விட்டது என்று எண்ணி தன்திறமைகளை தனக்குள் புதைத்து விடுகின்றார்கள்.அவர்கள் தனக்கான தனி திறமைகளை அறிந்து முன்னேற வேண்டும். என் வாழ்வில் இவ்வளவு முன்னேற்றங்களும் திருமணத்திற்கு பின்பே நடந்தது . சரண்யா உதிர்க்கும் பொன் மொழிகள் திசைகள் என்றால் நான்கு இருக்கும்.அதில் உனக்கான திசை எது என்று முதலில் நீமுடிவு செய்து பயணி,போகும் பாதை கடினமாக இருந்தாலும் கலங்கி, நிற்க்காதே,எப்பொழுதும் சாதனையாளர்களை முதலில் முட்டாள் என்றே விமர்சிக்கும் இந்த உலகம்.நீ முன்னேறி செல் உனக்கான வெற்றி என்பது உன்னை நோக்கி காத்திருக்கும். ✍🏿சுபா கிட்டு

saranya Read More »

WhatsApp Image 2023 06 16 at 5.05.59 PM

SHANTHI

சிறு வயதில் இருந்தே கற்பனை உலகில் சிறகடித்து பறந்தாள் இவள்….! சிங்கப்பூர் தன்னில் பிறந்த செந்தமிழ் மனம் மாறாத சிங்க பெண்ணே…! கலை ஆர்வம் என்பது இவளின் வண்ண கனவுகளின் உயிரோட்டம் தான்…! தமிழ் சினிமா செய்திகளை தனது நோட்டு புத்தகங்களில் ஒட்டி…! அன்றே சாதனைகள் படைத்திட புறப்பட்டாள்…! ஆரம்பத்தில் ஆதிக்கமும் அவமானங்களும் இவளை துரத்திய போதும்….! வீறு கொண்டு நடைபயின்றால் பாரதியின் மகளாய்…! சோசியல் மீடியாக்கள் இவளை நிராகரித்த சோதனைகள் பல உண்டு…! இருப்பினும் மனம் கலங்காது போராட தொடங்கினான் தனது லட்சியங்களை வெற்றிபாதைக்கு அழைத்து செல்ல…! இன்றோ இவள் அழகு பொருட்களின் அணி வகுப்பு நிறுவனங்களை…! சிறந்து அறிமுகப்படுத்தும் சிறந்த வெற்றி பெண்ணாய்…! நாகரீக வாழ்க்கையில் இவளின் லைஃப் ஸ்டைல் பிளாக்கர்….! இன்று சிறந்ததொரு சிந்தனைகளின் வழிகாட்டியாய் நிலைத்து நிற்க்க…! சாதனைகள் படைத்துசரித்திரம் உன்னை புகழ்த்திட வலம் வருவாய்…! சங்க தமிழ் பெண்ணே…! உனது எதிர்கால கவுகள் நிறைவேறும் காலங்கள் என்பது வெகுதூரம் இல்லை…! உனது மலர்கள் சந்திக்கணும் என்ற விருப்பம் இனிதே நிறைவேறட்டும்…! சிங்கப்பூரில் சிறந்த முதல் தமிழ் பெண்ணாய் லக்ஸுரியஸ் லைஃப் ஸ்டார் பிளாக்கர் என்ற..! உனது அங்கீகார லட்சியம் வெற்றி பெற்று உனது புகழ் பாடட்டும்…! பெற்றோர்களும் நண்பர்களும் உடன் இருந்து நம்பிக்கை கரம்கொடுக்க…! இவளின் சாதனைகள் தொடரட்டும்…! இனிவரும் இளைஞர்களுக்கு உனது கடின போராட்டங்களின்…! கஷ்டங்கள் நிறைந்த சாதனைகளின் வெற்றிபுன்னகை வழிகாட்டியாக…! இருந்து வாழ்த்தி வரவேற்க்கட்டும்…! ஆர்வம் நிறைந்த எவரின் லட்சியங்களும்தோற்றதில்லை…! என்ற உனது தன்னம்பிக்கை நிறைந்த வரிகள்…! எதிர்காலத்தில் இன்னும் உனக்கு வெற்றிகள் பெற்று தரட்டும்…! என்று உம்மை மகிழ்ந்து வாழ்த்துகிறது . ✍🏿subha kittu

SHANTHI Read More »

WhatsApp Image 2023 05 26 at 3.35.41 PM

Rtn Tamilarasan

ஆன்லைன் ஷாப்பிங் மூலம்மக்களின் பார்வையில்நீங்காது நிலை பெற்றுஇருக்கும் கலைஞனே! தொழில் கல்வி முடித்து! தொலைதூர கல்வியில் ஆறு வருடங்கள் சைக்காலஜிதன்னை கற்று! இயந்திரமயமாக மாறி போன இந்த சமுதாயத்தில்மக்களின் மனதோடுஉரையாட துணிந்தான்! மீடியா உலகின் மீதுஇவனுக்கோ தனி ஆர்வம்! ஆரம்பத்தில் கால் சென்டர் vj எனபணிபுரிந்த போதும்! வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு தன்னை வழிகாட்டியாகமாற்றினான்! இன்றோ சென்னையில் 50…100.. ட்ரெய்னிங்சென்டர்கள்… என பத்து ஆண்டுகளாக தொடர்கிறது 15 வெப்சைட்டில் இவனதுவெற்றி சாதனைகள்! முதலில் மீடியா உலகில்வாய்ப்புகள் தேடிமுன்னேறி சென்றுஉனது நிகழ்வுகள்! ரோட்ரி கிளப்பில் சொக்கலிங்கம் அவர்களின் நட்பினால்பல மேடைகள்ஏறி புகழ் பெற்றது! உனது லட்சிய வழிகளில் தடைகள்நீக்கினாய் தனி மனிதாய்! மீடியா துறையில்சாதனை படைத்திடவெற்றியின் சுவடுகளின் பின்னால்முன்னேறி சென்றாய்! Mc நிறுவனம் தன்னைசென்னையில்தொடங்கி விட! உனக்கு துணையாக நின்றவர்களில்ஒருவர் தான்தோழி நந்தினி அவர்கள்! சாதனைகள் படைத்திடஎண்ணும் இளைஞர்களுக்குஉனது திறமை மிகுந்தவழிகாட்டல்! நம்பிக்கையின் உயிர்ஊட்டி சென்றிட! உன்னை சுற்றி பலதிறமைமிக்க நண்பர்களின் வட்டம்விரிவடைந்து! மீடியா..மூவி எனபல கோணங்களில்வெளிபட்டதுஉனது திறமைகள்! உலகில் தலை சிறந்தஆங்கராக வேண்டும்என்ற உனது எண்ணம்கனிந்து நிறைவேறட்டும்! தடைகள் என்பதை கண்டு உனது தன்னம்பிக்கையைஇழக்காது! அச்சம் இன்றிபோராடும் இளைஞனே!உன்னை கண்டுஇந்த சமுதாயம்பெருமை கொள்ளட்டும்! இலங்கையில் உனது மேடை நிகழ்வுகள்அரங்கேறும் காலம்விரைவில் வந்துஉன்னை சேரட்டும்! உன்னை போன்றுஇன்றைய இளைய சமுதாயம்! பிறரின் வளர்ச்சிக்குஉதவி மகிழட்டும்! என உம்மை வாழ்த்திவளர்கிறது .

Rtn Tamilarasan Read More »

Scroll to Top